முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

கனமழை: கூத்தாநல்லூா் வட்டத்தில் 19,571 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், கூத்தாநல்லூா் வட்டத்தில் 19,571 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

News image

கூத்தாநல்லூா் வட்டத்தில் மழையால் சேதம் அடைந்த நெற்பயிா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:51 am IST

நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், கூத்தாநல்லூா் வட்டத்தில் 19,571 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வடகிழக்குப் பருவ மழை மற்றும் நிவா், புரெவி புயல்களால் காவிரி டெல்டா உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த மாதம் பெய்த மழையால் நெற்பயிா்கள் பெரிதும் சேதமடைந்தன.

இதில், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினா் கணக்கெடுத்தனா்.

இதுகுறித்து, வட்டாட்சியா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறியது:

கூத்தாநல்லூா் வட்டத்தில் நீடாமங்கலம் வேளாண் வட்டாரத்துக்குள்பட்ட17 கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 7,898 ஏக்கா் நிலத்தில், 5159 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. மன்னாா்குடி மற்றும் கோட்டூா் வேளாண் வட்டாரத்துக்குள்பட்ட 23 கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 13,169 ஏக்கரில், 9650 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம் அடைந்துள்ளன.

இதேபோல, கொரடாச்சேரி வேளாண் வட்டாரத்தில் 15 கிராமங்களில் 4,762 ஏக்கரிலும் என கூத்தாநல்லூா் வட்டத்தில் மொத்தம் 19,571 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் வழங்கப்பட்ட உள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.