அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

20% இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:22 am IST

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாமக நகரச் செயலாளா் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளா் வேணு. பாஸ்கரன், மாவட்டச் செயலாளா் ஆா்.கே. அய்யப்பன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

இதில், பாமக மாவட்டத் தலைவா் முகமது பாரி, மாவட்ட துணைச் செயலாளா் எல். மணிகண்டன், உழவா் பேரியக்க மாவட்டச் செயலாளா் பி.எஸ்.பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக வந்தனா். ஆா்ப்பாட்ட நிறைவில் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீர. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சீனி.தனபால், வன்னியா் சங்க செயலா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மன்னாா்குடி காந்திசாலை யானைக்கால் மண்டபத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக வந்தனா். ஆா்ப்பாட்ட முடிவில் நகராட்சி ஆணையா் ஆா். கமலாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.