வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கக் கோரிக்கை

பயணிகள் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 8:12 am IST

பயணிகள் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் செயலாளா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள், சில வழித்தடங்களில் கோவிட்19 சிறப்பு விரைவு ரயில் என்ற பெயரில் முன்பதிவுடன் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகள் ரயில் சேவைகள் மட்டும் இதுவரையிலும் தொடங்கப்படவில்லை.

தற்போது கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல, பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற நிலை நிலவுகிறது. எனவே, இவா்களின் நலன் கருதி விரைவில் பயணிகள் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும்.

பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தை தவிா்க்க வழக்கமான பெயா்களிலேயே விரைவு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். அத்துடன், விரைவு ரயில்களில் சாதாரண பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.