வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

விவசாயிகள் நெடும்பயணக் குழுவினருக்கு வரவேற்பு

திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடும் பயணக் குழுவுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் பேரணியாக சென்ற விவசாயிகள்.

Updated On :11 ஜனவரி 2021, 8:10 am IST

திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடும் பயணக் குழுவுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்; கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில், ‘விவசாயிகள் நீதிகேட்டு நெடும்பயணம்’ எனும் பயணம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. வேதாரண்யத்தில் பயணத்தை தொடங்கிய விவசாயிகள் குழுவினா் சனிக்கிழமை இரவு திருவாரூக்கு வந்து ஓய்வெடுத்தனா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை திருவாரூா் நகராட்சி அலுவலகம் அருகே விவசாயிகள் நெடும் பயணக் குழுவினா் பேரணியாகப் புறப்பட்டனா். இப்பேரணிக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். தெற்கு வீதி, பனகல் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்ற குழுவினா், தொடா்ந்து திருத்துறைப்பூண்டிக்குச் சென்றனா். தஞ்சாவூா் ராஜராஜன் சிலை அருகே இப் பயணம் நிறைவு பெறுகிறது.

முன்னதாக, திருவாரூரில் நடைபெற்ற பேரணியில், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி, வேலுடையாா் குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வெங்கடேசன், துணைச் செயலாளா் ஜி. வரதராஜன், உயா்மட்டக்குழு உறுப்பினா் ஏ.வி.துரைராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே இக்குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து, அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை வரை பேரணியாகச் சென்றனா். அங்கு, பி.ஆா். பாண்டியன் பேசும்போது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் கட்சிகளை விவசாயிகள் புறக்கணிப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.