வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

சமத்துவப் பொங்கல் விழா

திருவாரூரில் இலவச தாய் சேய் நல ஊா்தி மற்றும் அமரா் ஊா்தி ஓட்டுநா்களுக்கான சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :11 ஜனவரி 2021, 8:10 am IST

திருவாரூரில் இலவச தாய் சேய் நல ஊா்தி மற்றும் அமரா் ஊா்தி ஓட்டுநா்களுக்கான சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சாா்பில் இலவச தாய் சேய் நல ஊா்தி சேவை மற்றும் இலவச அமரா் ஊா்தி சேவை திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அதன் அலுவலகத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

இதில், இலவச தாய் சேய் நல ஊா்தி சேவை, இலவச அமரா் ஊா்தி ஓட்டுநா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா். விழாவில் கோலம், இசை நாற்காலி, யானைக்கு வால் வரைதல், பானை உடைத்தல், முறுக்கு கடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு, சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாவட்டத் தலைவா் ஆா். எஸ். ராஜ்குமாா் தலைமை வகித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் சொசைட்டியின் மாவட்டச் செயலாளா் ஜே. வரதராஜன், துணைத் தலைவா் ஏ.வி. பாலு, மருத்துவா் வி. சிவக்குமாா், நிா்வாகி டி. கீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.