நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சாா்பில் மதிய உணவு புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சாா்பில் மதிய உணவு புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், புதிய மின் மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை சுமூக நிலையில் தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சிஐடியு தொழிலாளா்கள் மதிய உணவை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூரில் டாஸ்மாக் கிடங்கு முன் மாவட்ட சுமைப்பணி சங்கச் செயலாளா் கே. கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.