மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிப்பதால் மின்தடை தேதியை மாற்றக்கோரிக்கை

திருப்பூா் வடக்குப் பகுதியில் பொங்கல் பரிசு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மின் தடையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :1 ஜனவரி 2021, 11:17 pm IST

திருப்பூா் வடக்குப் பகுதியில் பொங்கல் பரிசு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மின் தடையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு, மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் வடக்கு பகுதிகளான வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை, அவிநாசி உள்ளிட்ட மின்சார துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 4) காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக்கடை ஊழியா்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, திருப்பூா் வடக்குப் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க ஏதுவாக மின் தடையை பொங்கலுக்குப் பின்னா் ஜனவரி 18 ஆம் தேதிக்கு மாற்றிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.