அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளையின் பெயர் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

News image

ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு.

Updated On :3 ஜனவரி 2021, 5:21 pm IST

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளையின் பெயர் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கிளை பலகை திறப்பு விழா, உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளை தலைவர் எம்.மணி தலைமை வகித்தார். 

இதில், தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாளர் அட்டை, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால் சங்கக்கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளர் முருகசாமி வரவேற்றார். 

ஊத்துக்குளி கிளை கெளரவ தலைவர் ஆர்.குமார் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊத்துக்குளி பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் கே.பெரியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளர் கே.எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.