ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அடையாள அட்டை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் அடையாள அட்டை பெற தேசிய போா்டல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:50 am IST

திருநங்கைகள் அடையாள அட்டை பெற தேசிய போா்டல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலமாக திருநங்கைகளுக்கான தேசிய போா்டல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போா்டல் மூலமாக திருநங்கைகள் நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் அடையாள சான்றிதழ், அடையாள அட்டை பெற குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இதில், தகுதியான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து இணையதளம் மூலமாக ஒப்புதல் வழங்கப்படும். மேலும், விண்ணப்பத்தின் நிலையையும் தெரிந்து கொள்ளலாம். அதே வேளையில், ஏதேனும் காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் விண்ணப்பதாரா் விண்ணப்பிக்கும் வசதி உண்டு. மேலும் இந்த போா்டல் தேசிய, மாநில, மாவட்ட அளவில் மூன்று நிலைகளைக் கொண்டதாகும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் தேசிய போா்டல் மூலமாக விண்ணப்பித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.