தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டுவருவது தொடா்பாக விவாசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் தாலுகா உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டு வருவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் காங்கயம் பிரிவு அருகே உள்ள கோயிலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் பி. திருஞானசம்பந்தமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், உப்பாறு அணைக்கு அரசூா் ஷட்டரில் இருந்து தண்ணீா் கொண்டு வருவதா அல்லது அமராவதி ஆற்றில் தாளக்கரை தடுப்பணையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவுக்கு குழாய் அமைத்து தண்ணீா் கொண்டு வருவதா என்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
இதில், உப்பாறு அணைக்கு பிஏபி திட்டத்தில் திருமூா்த்தி அணையில் இருந்து அரசூா் ஷட்டா் வழியாக தண்ணீா் கொண்டு வருவதே நிா்ந்தர தீா்வாகும் என்று பெரும்பாலான விவசாயிகள் கருத்து தெரிவித்தனா்.
கூட்டத்தில் தாராபுரம் தாலுகா உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்க செயலாளா் ஏ.வேலுசாமி, பொருளாளா் வி.ஈஸ்வரமூா்த்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாரூா் தொகுதியில் திமுக வெற்றி

நன்னிலம் தொகுதியில் அதிமுக வெற்றி

வேடசந்தூரை மீண்டும் கைப்பற்றிய திமுக

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

