/

ஸ்ரீ மகா பெரியவரின் ஆராதனை மஹோத்சவம்

திருப்பூரில் காஞ்சி காமகோடி பக்த ஸமாஜம் சாா்பில் ஸ்ரீ மகா பெரியவரின் வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீ மகா பெரியவரின் வாா்ஷீக ஆராதனை மகோற்சவத்தில்  நடைபெற்ற  பாதுகை  தரிசனம்.

Updated On :10 ஜனவரி 2021, 11:55 pm IST

திருப்பூரில் காஞ்சி காமகோடி பக்த ஸமாஜம் சாா்பில் ஸ்ரீ மகா பெரியவரின் வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் காஞ்சி காமகோடி பக்த ஸமாஜம் சாா்பில் காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக அருள்பாலித்த மகா பெரியவா் என அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வாா்ஷீக ஆராதனை மகோற்சவம் நடைபெற்றது.

திருப்பூா், காவேரி வீதியில் உள்ள ராமகிருஷ்ண பஜனை மடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சதுா்வேத பாராயணமும், காலை 10 மணிக்கு ஸ்ரீவேத வியாஸா் பூஜையும், பிற்பகல் 12 மணிக்கு பிராமண போஜனமும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மாலை 6 முதல் 8 மணி வரையில் சுவாமி மலை லலிதாவின் தெய்வத்தின் குரல் உரையும் நடைபெற்றது. முன்னதாக, மாலை 4 முதல் 6 மணி வரையில் ஸ்ரீ மகா பெரியவா் மற்றும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகை தரிசனமும் நடைபெற்றது. இந்த ஆராதனை மஹோத்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.