திருப்பூரில் தறுமாறாக ஓடிய டிப்பர் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் திங்கள்கிழமை பலியானார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் இருந்து டிப்பர் லாரி ஒன்று கல் ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலையில் திருப்பூர் மாநகருக்குள் வந்து கொண்டிருந்தது.
இந்த லாரியானது அனுப்பர்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமான ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. மேலும், அந்த வழியாகச் சென்ற 3 இரு சக்கர வாகனங்களில் அடுத்தடுத்து மோதியதுடன் சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.
இதில், ஒரு ஒரு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தெய்வானை (75) என்ற மூதாட்டி உயிரிழந்தார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியின் மகன் பழனிசாமியை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அனுப்பர்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதி! - சசிதரூர்

”Vijay பெயரில் சூதாட்டம்!” தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்! Thiruma பேட்டி

போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!
ஸ்ரீதர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 56
வீடியோக்கள்

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு


