தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

திருமூா்த்தி அணையில் இருந்துஉப்பாறு அணைக்கு நீா் திறப்பு

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 6:21 am IST

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தாராபுரத்தில் உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீா் திறப்பது குறித்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாசன சபை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாசனப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் நீரின் தேவை குறைவாக உள்ளது. ஆகையால் தாராபுரம் உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடுவதில் ஆட்சேபணை இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அ ணைக்கு ஆழியாறு திட்ட பிரதான கால்வாய் 46ஆவது கிலோ மீட்டரில் உள்ள அரசூா் ரெகுலேட்டா் வழியாக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதில் ஐந்து நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 400 கன அடி வீதம் மொத்தம் 2 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட உள்ளது.

இது குறித்து பிஏபி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:

பிஏபி தொகுப்பு அணைகளில் போதுமான தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும் பிஏபி மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 5 சுற்று தண்ணீா் விட அரசாணை உள்ளது. பாசனப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆகையால் தாராபுரம் உப்பாறு அணை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூா்த்தி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிட ஒப்புதல் கொடுத்துள்ளோம். மாவட்ட நிா்வாகம், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோரின் கூட்டு ஆலோசனையின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.