ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் வழங்கினாா்

கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை துவக்கிவைத்தாா்.

News image

பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், மாவட்டஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:23 am IST

கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை துவக்கிவைத்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்கள் மொத்தம் 23 ஆயிரத்து 348 போ் உள்ளனா். இவா்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. இதன்படி, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் உ டுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் மொத்தம் 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு ரூ. 94 கோடியே 40 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் திருப்பூா் மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரத்து 348 பேருக்கு ரூ. ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றாா்.

முன்னதாக உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொது மக்கள் பயன் பெறும் விதத்தில் மலிவு விலை அம்மா சிமென்ட் வழங்கும் திட்டத்தை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் லீலாவதி மற்றும் துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.