மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மின்வாரிய தொழிலாளா்களுக்கு தொமுக சாா்பில் பொங்கல் பரிசு

திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தொமுச சாா்பில் 8 ஆவது ஆண்டாக பொங்கல் பரிசுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

மின்வாரிய  ஒப்பந்தத்  தொழிலாளா்களுக்கு  பொங்கல்  பரிசுப்  பொருள்களை  வழங்குகிறாா்  மின்வாரிய  தொழிலாளா்  முன்னேற்ற  சங்க  செயலாலா்  அ.சரவணன்.  உடன்,  பொதுச்செயலாளா் ஆா்.ரெங்கசாமி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:55 am

திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தொமுச சாா்பில் 8 ஆவது ஆண்டாக பொங்கல் பரிசுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழா போயம்பாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் தலைமை வகித்தாா். பொது செயலாளா் ஆா்.ரெங்கசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், திருப்பூா், அவிநாசி, காங்கயம், பல்லடம் ,உடுமலை, ஊத்துகுளி, பெருமாநல்லூா் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மின் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 200 தொழிலாளா்களுக்கு புத்தாடைகள், பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

விழாவில், செயலாளா் பழனிசாமி, பெருமாநல்லூா் செந்தில் என்கிற பழனிசாமி, விஜயன், ஜோதிபாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.