அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 2:26 am

திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்ள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குடியரசு தினத்தை ஒட்டி ஜனவரி 26ஆம் தேதியும், வள்ளலாா் நினைவு தினத்தை ஒட்டி ஜனவரி 28ஆம் தேதியும் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.