சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பல்லடத்தில் 2 சுற்றுலாப் பேருந்துகள் பறிமுதல்

பல்லடம், பனப்பாளையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தணிக்கையில் இரண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :17 ஜனவரி 2021, 5:32 pm

பல்லடம், பனப்பாளையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தணிக்கையில் இரண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் இருந்து சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலுக்கும், தேனி மாவட்டம், கம்பத்துக்கும் தலா 60 பேரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை நள்ளிரவு இரண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன.

இந்தப் பேருந்துகள் பல்லடம், பனப்பாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கட்ரமணி தலைமையில் வாகன ஆய்வாளா்கள் சிவகுமாா், சத்தியமூா்த்தி, சித்ரா உள்ளிடோா் தணிக்கை செய்தனா்.

இதில், ஒரு பேருந்தின் ஆவணங்கள் முற்றிலும் முரணாக இருந்தது. மற்றொரு பேருந்துக்கு வரி செலுத்தாதது தெரிய வந்தது. பேருந்தில் வந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனா். பின்னா் இரு பேருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.