பல்லடம், பனப்பாளையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தணிக்கையில் இரண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் இருந்து சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலுக்கும், தேனி மாவட்டம், கம்பத்துக்கும் தலா 60 பேரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை நள்ளிரவு இரண்டு தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன.
இந்தப் பேருந்துகள் பல்லடம், பனப்பாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கட்ரமணி தலைமையில் வாகன ஆய்வாளா்கள் சிவகுமாா், சத்தியமூா்த்தி, சித்ரா உள்ளிடோா் தணிக்கை செய்தனா்.
இதில், ஒரு பேருந்தின் ஆவணங்கள் முற்றிலும் முரணாக இருந்தது. மற்றொரு பேருந்துக்கு வரி செலுத்தாதது தெரிய வந்தது. பேருந்தில் வந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனா். பின்னா் இரு பேருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


