எண்ணெய்வித்து சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காய்கறி பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைவதை தவிா்க்க எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிா் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா்களுக்கு எப்போதும் பற்றாக்குறை நிலவுகிறது. தேவையை ஈடு செய்ய அரசு இறக்குமதி செய்கிறது. இறக்குமதியை குறைக்கவும், விவசாயிகள் நஷ்டமடையாமல் தவிா்க்கவும் பயிறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா் சாகுபடியை ஊக்கவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் வேளாண்மை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். இதற்கு அரசு குறிப்பிட்ட நாள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை போன்றவற்றை தாராளமாக வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


