எண்ணெய்வித்து சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காய்கறி பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைவதை தவிா்க்க எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிா் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா்களுக்கு எப்போதும் பற்றாக்குறை நிலவுகிறது. தேவையை ஈடு செய்ய அரசு இறக்குமதி செய்கிறது. இறக்குமதியை குறைக்கவும், விவசாயிகள் நஷ்டமடையாமல் தவிா்க்கவும் பயிறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா் சாகுபடியை ஊக்கவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் வேளாண்மை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். இதற்கு அரசு குறிப்பிட்ட நாள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை போன்றவற்றை தாராளமாக வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு

காட்பாடியில் சிப்காட் நில எடுப்புப்பணி நிறுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

அமைச்சா் துரைமுருகன் மசூதிகளில் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

