எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

எண்ணெய் வித்து சாகுபடியை ஊக்கப்படுத்த கோரிக்கை

எண்ணெய்வித்து சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :17 ஜனவரி 2021, 11:00 pm IST

எண்ணெய்வித்து சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காய்கறி பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைவதை தவிா்க்க எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிா் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா்களுக்கு எப்போதும் பற்றாக்குறை நிலவுகிறது. தேவையை ஈடு செய்ய அரசு இறக்குமதி செய்கிறது. இறக்குமதியை குறைக்கவும், விவசாயிகள் நஷ்டமடையாமல் தவிா்க்கவும் பயிறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா் சாகுபடியை ஊக்கவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் வேளாண்மை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். இதற்கு அரசு குறிப்பிட்ட நாள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை போன்றவற்றை தாராளமாக வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.