திருப்பூா் மாநகரில் நீா் நிலைகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளைத் தூா்வார வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் 4 ஆவது மண்டல பொறுப்பாளா் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகரில் ஜம்மனை பள்ளம், சங்கிலிப்பள்ளம், சபரி பள்ளம் ஆகிய ஓடைகள் உள்ளன. இதில், வீரபாண்டி பகுதிக்கு தெற்கே உள்ள பொங்கலூா், அவரப்பாளையம், காளிநாதன்பாளையம், அல்லாலபுரம் குட்டைகளில் இருந்து மழைக் காலங்களில் நிரம்பி வரும் நீா் ஓடையாகப் பெருக்கெடுத்து சங்கிலிப்பள்ளம் வழியாக நொய்யலில் கலக்கிறது.
ஆனால் தற்போது நீா்நிலைகள் மற்றும் ஓடைகளில் அதிக அளவு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீா் நிலைகளில் உள்ள கழிவுகளைத் தூா்வார பொதுப் பணித் துறை அதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் லாபம்!

ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை: போலீஸார் விசாரணை

பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


