எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவா் கைது

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:02 pm IST

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள கோவில்வழி அருகே ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஏடிஎம் மையம் முன்பாக கல்லுடன் ஆண் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.

அவரை காவல் துறையினா் பிடித்து விசாரித்ததில் அவா் கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (40) என்பதும், தனது குடும்பத்துடன் 4 நாளுக்கு முன்பாக இடுவம்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும், தேவேந்திரன் திண்டுக்கல் செல்வதற்காக கோவில்வழிக்கு வந்துள்ளாா். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளாா். இதில், மது போதையில் அருகில் இருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று இயந்திரத்தை கல்லால் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூா் ஊரக காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.