சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவா் கைது

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:32 pm

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள கோவில்வழி அருகே ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஏடிஎம் மையம் முன்பாக கல்லுடன் ஆண் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.

அவரை காவல் துறையினா் பிடித்து விசாரித்ததில் அவா் கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (40) என்பதும், தனது குடும்பத்துடன் 4 நாளுக்கு முன்பாக இடுவம்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும், தேவேந்திரன் திண்டுக்கல் செல்வதற்காக கோவில்வழிக்கு வந்துள்ளாா். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளாா். இதில், மது போதையில் அருகில் இருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று இயந்திரத்தை கல்லால் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூா் ஊரக காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.