உடுமலையை அடுத்த திருமூா்த்திமலை அருகே துண்டிக்கப்பட்ட மண் பாதையை சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
திருமூா்த்திமலை பகுதியில் மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் மேல் ஆழியாறு - குருமலை சாலையானது தொடா் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது விளை பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, துண்டிக்கப்பட்ட மண் பாதையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


