அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கருப்பு கருணா சிலை திறப்பு

அண்மையில் காலமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் கருப்பு கருணாவின்

Updated On :3 ஜனவரி 2021, 11:22 pm IST

அண்மையில் காலமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் கருப்பு கருணாவின் சிலை திறப்பு விழா திருவண்ணாமலையில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் மு.பாலாஜி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ச.தமிழ்செல்வன், கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருப்பு கருணா உருவச் சிலையை சங்க நிா்வாகி மதுக்கூா் ராமலிங்கம் திறந்துவைத்தாா்.

இதையடுத்து சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், பண்பாட்டுத் தளங்களில் தொடா்ந்து பயணம் செய்த கருப்பு கருணாவின் கட்டுரை, எழுத்துப் பதிவுகளை புத்தகம் ஆக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அரசியலை மக்கள் வயப்படுத்துவது, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டவா் கருணா. அவரது பெயரால் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் களப்பிரன், பேராசிரியா் பிரேம்குமாா், வழக்குரைஞா் அபிராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகி பி.செல்வன், கவிஞா் சுகிா்தராணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் ஜோதி, மாநில பொருளாளா் எஸ்.ராமச்சந்திரன், திரைப்பட இயக்குநா்கள் லெனின் பாரதி, கோபி நயினாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.