திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பங்குச் சந்தைகளில் மீண்டும் உற்சாகம்: புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்

கடந்த வாரம் மந்த நிலை காணப்பட்ட இந்தியப் பங்குச் சந்தை திங்கள்கிழமை புதிய உற்சாகம் பெற்றது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:43 pm

DIN

கடந்த வாரம் மந்த நிலை காணப்பட்ட இந்தியப் பங்குச் சந்தை திங்கள்கிழமை புதிய உற்சாகம் பெற்றது.
உலக அளவிலான சந்தையின் ஆரோக்கியமான போக்கு, மற்றும் நிறுவனங்களின் வருவாய் பெருக்கங்கள் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்ததால், திங்கள்கிழமை பங்குச் சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
அண்மைக் காலத்தின் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான எரிசக்தித் துறை நிறுவனங்களின் பங்குகளையும், மனை வர்த்தகம், மூலதனப் பொருள்கள் ஆகியத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பங்குகளையும் முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்தனர். டாடா ஸ்டீல் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையில் நல்ல வருவாயைக் காட்டியிருந்தன. இந்தப் போக்கு, நிறுவனங்களில் அதிக மூதலீடு செய்வதற்கான தைரியத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்கப் பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை அமோக வர்த்தகத்தைக் கண்டதன் எதிரொலியாக, ஐரோப்பிய மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளும் அமோக வர்த்தகத்தில் ஈடுபட்டன.
இந்த சர்வதேச நிலவரமும், முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மும்பைப் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை 
சுறுசுறுப்பாகத் தொடங்கிய வர்த்தகம், இதுவரை 
இல்லாத 34,351 சென்செக்ஸ் புள்ளிகளைத் தொட்டது. எனினும், பிறகு அந்த வர்த்தகம் லேசாக மந்தமடைந்து 34,115 புள்ளிகள் வரை குறைந்தது.
இறுதியில், சென்செக்ஸ் 34,300 புள்ளிகளை அடைந்து, 294 புள்ளிகள் (0.87 சதவீதம்) வளர்ச்சியுடன் நிறைவடைந்தது.
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியைப் பொருத்தவரை, திங்கள்கிழமை இடையில் 10,555 புள்ளிகள் வரை உயர்வடைந்து, இறுதியில் 10,340 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது 84 புள்ளிகள் (0.81 சதவீதம்) வளர்ச்சியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.