ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மின்சார வாகனங்களை அதன் சென்னை ஆலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே. கூ தெரிவித்ததாவது:
நடப்பாண்டு முதல் வரும் 2020-ஆண்டுக்குள்ளாக எலக்ட்ரிக் எஸ்யுவி உள்ளிட்ட எட்டு வகையான மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறோம். வரும் 2019-ஆம் ஆண்டு இரண்டாம் பிற்பகுதியில் இந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார கார்களுக்கான பாகங்களை முழுவதுமாக இறக்குமதி செய்து அதனை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை ஆலையில் மின்சார வாகனங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது.
இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில் 80 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளோம். வரும் 2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் 1 கோடி வாகனங்களை தாண்டும் இலக்கையும் நிர்ணயித்துள்ளோம்.
2018-2020-க்குள் எட்டு புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், தற்போது ஆண்டுக்கு 7 லட்சமாக உள்ள சென்னை ஆலையின் உற்பத்தி திறனை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 7.5 லட்சமாக அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட கால அளவில் மின்சார வாகன தயாரிப்பில் சென்னை ஆலையை சர்வதேச மையமாக உருவெடுக்க செய்வதே எங்களின் முதல் திட்டம்.
மின்சார சொகுசு கார்கள் முதற்கட்டமாக இந்தியாவின் 15 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். மின்சார கார்களின் விலை மற்றும் அவற்றின் விற்பனை இலக்கு ஆகியவற்றை நிர்ணயிக்கும் பணி தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



