தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பங்குச் சந்தையின் சீரிய வளர்ச்சியால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.20.70 லட்சம் கோடி அதிகரிப்பு

பங்குச் சந்தையின் சீரிய வளர்ச்சியால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 2017-18 நிதி ஆண்டில் ரூ.20.70 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 7:24 pm

பங்குச் சந்தையின் சீரிய வளர்ச்சியால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 2017-18 நிதி ஆண்டில் ரூ.20.70 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
சர்வதேச மற்றும் உள்ளூர் நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து 2017-18 நிதி ஆண்டில் சென்செக்ஸ் குறியீட்டெண் 3,348.18 புள்ளிகள் (11.30%) அதிகரித்து 32,968.68 புள்ளிகளை எட்டியது. அதிலும் குறிப்பாக, நடப்பு ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக பிஎஸ்இ குறியீட்டெண் 36,443 புள்ளிகளைத் தொட்டது. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் மொத்த சந்தை மதிப்பு 20,70,472 கோடி அதிகரித்து 1,42,24,997 கோடியானது.
2017-18 நிதி ஆண்டைப் பொருத்தவரை பங்குச் சந்தைகளுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. சென்செக்ஸ் ஏறக்குறைய 12 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இதற்கு, அன்னிய முதலீட்டு வரத்து வலுவான நிலையில் இருந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்களின் சிறப்பான பங்களிப்பு உள்ளிட்டவையே முக்கிய காரணங்களாக இருந்தது என கோட்டக் செக்யூரிட்டீஸ் துணைத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் டேட்டா பகுப்பாய்வு) சந்தீப் சோர்தியா தெரிவித்துள்ளார்.மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு முறையே வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
இந்த நிலையில், நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கான கடைசி வர்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், சென்செக்ஸ் 205.71 புள்ளிகள் சரிவடைந்து 32,968.68 புள்ளிகளாக நிலைத்தது. நடப்பு நிதியாண்டின் இறுதி வர்த்தக தினத்தில் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.