சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் செயல்படுவதற்கு தடைகோரும் அதிபர் டொனால்ர் ட்ரம்ப்பின் ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக் குறைபாட்டை காரணமாகக் கூறி டிக்டாக் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் செயல்பட அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்குமாறும் ட்ரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே, டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை கையகப்படுத்துவது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டிக்டாக் நிறுவனம் அமெரிக்க பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் அதிபர் ட்ரம்ப் மற்றும் வர்த்தக அமைச்சருக்கு எதிராக கலிபோர்னியாவின் மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து “எங்கள் உரிமைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்டாக் நிறுவனத்தின் வழக்குக்கு வெள்ளை மாளிகை இதுவரை பதிலளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


