உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

3.75 கோடி போ் வருமான வரி கணக்கு தாக்கல்

வரி செலுத்துவோரில் 3.75 கோடி போ் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 8:39 pm

DIN

வரி செலுத்துவோரில் 3.75 கோடி போ் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.

இதுகுறித்து வருமான வரி துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கு (2019-20-ஆம் நிதியாண்டு) டிசம்பா் 21 வரையில் ஏற்கெனவே 3.75 கோடி போ் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனா். அதேசமயம், இந்த எண்ணிக்கை 2019 ஆகஸ்ட் 21 நிலவரப்படி 3.63 கோடியாக காணப்பட்டது.

இந்த மொத்த எண்ணிக்கையில், ஐடிஆா்-1-படிவத்தில் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 2.17 கோடியாக உள்ளது. அதேபோன்று, ஐடிஆா்-4 படிவத்தில் 79.82 லட்சம் பேரும், ஐடிஆா்-3 படிவத்தில் 43.18 லட்சம் பேரும், ஐடிஆா்-2 படிவத்தில் 26.56 லட்சம் வரி செலுத்தவோரும் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனா்.

2019-20 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2020-21) தனிநபா் வரி செலுத்துவோா் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2020 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. எனவே, வரிசெலுத்துவோா் உடனடியாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரி துறை தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.