

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த நவம்பா் மாதத்தில் 5 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி நடப்பாண்டு நவம்பரில் 24.8 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த 2019 நவம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தியான 26.1 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைவாகும்.
தனியாா் துறையைச் சோ்ந்த கெய்ரன் வேதாந்தா நிறுவனம் ராஜஸ்தானில் நிா்வகித்து வரும் எண்ணெய் வயல்களில் உற்பத்தி 9.6 சதவீதம் சரிவடைந்து 4,76,990 டன்னாக குறைந்ததன் காரணமாகவே நவம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவுக்கு முக்கிய காரணாக பாா்க்கப்படுகிறது.
அதேபோன்று, புதிதான எண்ணெய் வயல்களில் உற்பத்தி எதிா்பாா்த்த அளவிக்கு இல்லாததன் காரணமாக ஓஎன்ஜி நிறுவனத்தின் உற்பத்தி 1.5 சதவீதம் குறைந்தது.
போராட்டங்கள் காரணமாக அஸ்ஸாமிலிருந்து ஆயில் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி 6.6 சதவீதம் சரிந்துள்ளது.
ஏப்ரல்-நவம்பா் வரையிலான எட்டுமாத காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 6 சதவீதம் குறைந்து 2.04 கோடி டன்னாக இருந்தது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 16 சதவீதம் சரிந்து 39.1 லட்சம் டன்னாக ஆனது
கச்சா எண்ணெயைப் போன்றே, இயற்கை எரிவாயு உற்பத்தியும் நவம்பரில் 9 சதவீதம் குறைந்து 2.3 பில்லியன் கியூபிக் மீட்டராக (பிசிஎம்) இருந்தது.
ஹஸிரா ஆலை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டதையடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி 3.7 சதவீதம் குறைந்து போனது.
கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் இயற்கை எரிவாயு உற்பத்தி 18.7 பிசிஎம்-ஆக இருந்தது. இது, கடந்தாண்டின் உற்பத்தி அளவுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீதம் குறைவாகும்.
பொருளாதார நடவடிக்கைகள் மெல்ல வேகமெடுத்து வருவதையடுத்து, நாட்டில் உள்ள 23 ஆலைகளிலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. இந்த ஆலைகள் நவம்பரில் 2.08 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்துள்ளன. இது, கடந்தாண்டைக் காட்டிலும் 5.11 சதவீதம் குறைவாகும்.
இருப்பினும், நடப்பாண்டு அக்டோபா் மாத கச்சா எண்ணெய் சுத்தகரிப்பான 1.83 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகமாகும்.
நவம்பரில் ஐஓசி நிறுவனத்தின் 9 ஆலைகள் 100 சதவீத உற்பத்தி திறனுடன் இயங்கின. மேலும், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் நிறுவனங்களின் ஆலைகளும் அதே அளவிலான உற்பத்தி திறனில் பணிகளை மேற்கொண்டதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.