பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஒன்பிளஸ் போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு வசதி!

கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு வசதி விரைவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகமாக உள்ளது. 

Published On :

கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு வசதி விரைவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகமாக உள்ளது. 

கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டன்ட்டுக்கான ஆம்பியண்ட் மோடு வசதியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, சமீபத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு(Google Assistant Ambient Mode) வசதியுடன் வருகிறது. 

சோனி, ஸியோமி, லெனோவா உள்ளிட நிறுவனங்களைத் தொடர்ந்து இந்த வசதி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் வருகிறது. சீனத் தயாரிப்பான ஒன்பிளஸ் போன்களில் இந்த அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

முதற்கட்டமாக, ஒன்பிளஸ் 3 மாடல் போனில் அறிமுகம் செய்யப்பட்டு, தொடர்ந்து, விரைவில் மற்ற ஒன்பிளஸ் போன்களில் அருங்குமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு ஆண்ட்ராய்டு ஓரியோ அல்லது அதற்குப் பின்னர் வந்த இயங்குதளத்தில் இயங்கும்.

கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு தங்களது மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் ஸ்மார்ட் டிஸ்பிளே-வை வைக்கவும், புகைப்படத்தை டைனமிக் வால்பேப்பர் ஸ்லைடு ஷோவுடன் வைக்க பயன்படுகிறது. ஆம்பியண்ட் மோடு சென்சார்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை ஒருங்கிணைக்கவும், வானிலை, நினைவூட்டல் உள்ளிட்ட பல தகவல்களை வழங்குகிறது. மியூசிக் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தவும் பயனப்டுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.