பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஒன்பிளஸூக்கு போட்டியாக களமிறங்கும் சாம்சங் நோட் 10 லைட்

கேலக்ஸி நோட் 10 பிளஸ் எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்திய  சாம்சங் தற்போது 'நோட் 10 லைட்' எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Published On :

கேலக்ஸி நோட் 10 பிளஸ் எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்திய  சாம்சங் தற்போது 'நோட் 10 லைட்' எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், அதற்கு போட்டியாக சாம்சங் நோட் 10 லைட் களமிறங்குகிறது. 

நோட் 10 லைட் 6 ஜிபி வேரியண்ட் 38,999 ரூபாய், 8 ஜிபி வேரியண்ட் 40,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 128 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் வருகின்றன. 

கேலக்ஸி நோட் 10 பிளஸ் போனை ஒப்பிடுகையில், இதில் கூடுதலாக சதுர வடிவ கேமரா ஒன்று உள்ளது.  6.7 இன்ச் ஃபுல் எச்டி + அமோல்டு பிளஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே உள்ளது. மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் ஒரு முன் கேமரா கொண்டுள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஓ.ஐ.எஸ் கொண்ட 12 எம்.பி பிரதான கேமரா உள்ளது.  செல்பி கேமராவில் 32 எம்.பி சென்சார்  உள்ளது.

6.7 அங்குல கேலக்ஸி நோட் 10 லைட்டை நோட்பேடாக பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 9810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 10nm 64-பிட் ஆக்டா-கோர் ப்ராசசர், 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.