கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை ஒன்று தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம், தனது 'சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ.' நிறுவனத்தை தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றி அறிவித்துள்ளது.
முன்னதாக தென் கொரியாவில் குமி(gumi) நகரில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து வியட்நாமில் தற்காலிகமாக ஒரு ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.
சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி எஸ் 20 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஆகியவை முழுமையாக குமி நகரில் உள்ள நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து, வியட்நாமில் உள்ள தளத்தில் 2,00,000 ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று யோங்கினில் உள்ள சாம்சங் தொழிற்சாலையிலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. எனினும் அந்த தொழிற்சாலை மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


