மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நெல் பயிரிடும் பரப்பளவு 1.23% குறைந்தது

நடப்பு காரீஃப் பருவத்தில் இதுவரையில் நெல் பயிரிடும் பரப்பு 1.23 சதவீதம் குறைந்து 388.56 லட்சம் ஹெக்டேராக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:09 pm

DIN

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பருவமழை பற்றாக்குறை: சில மாநிலங்களில் பருவமழை பற்றாக்குறையாக இருப்பதன் காரணமாக, 2021-22-ஆம் காரீஃப் பருவத்தில் இதுவரையில் நெல்பயிரிடும் பரப்பு 1.23 சதவீதம் குறைந்து 388.56 லட்சம் ஹெக்டேராகி உள்ளது.

அதேபோன்று, எண்ணெய் வித்துகள், முக்கிய உணவு தானியங்கள், பருத்தி பயிரிடும் பரப்பும் குறைந்துள்ளது. அதேசமயம், கரும்பு, சணல், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு சற்று அதிகரித்துள்ளது.

அக்டோபரில் அறுவடை: காரீஃப் பருவத்தின் முக்கிய பயிராக நெல் உள்ளது. ஜூனில் தொடங்கும் நெல் சாகுபடி அக்டோபரிலிருந்து அறுவடை செய்யப்படுகின்றன.

ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 25 வரையில் தென்மேற்கு பருவமழை 10 சதவீதம் குறைவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி ஆகஸ்ட் 26 வரையிலுமாக 388.56 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை தவிா்த்து ஏனைய பெரும்பாலான மாநிலங்களில் நெல் பயிரிடும் பரப்பானது சரிவைடந்துள்ளது.

முக்கிய உணவு தானியங்கள்: ஒடிஸாவில் நெல் பயிரிடும் பரப்பு 36.04 லட்சம் ஹெக்டேரிலிருந்து 31.25 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. தெலங்கானாவில் இது 18.71 லட்சம் ஹெக்டேரிலிருந்து 17.61 லட்சம் ஹெக்டேராகியுள்ளது.

அதேபோன்று, ஆகஸ்ட் 26 வரையிலான காலகட்டத்தில் சத்தீஸ்கரில் நெல் பயிரிடும் பரப்பு 39.04 லட்சம் ஹெக்டேரிலிருந்து 36.67 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது.

முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பளவும் ஆகஸ்ட் 26 நிலவரப்படி 173.61 லட்சம் ஹெக்டேரிலிருந்து 170.98 லட்சம் ஹெக்டேரானது. அதேபோன்று, எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பும் 192.51 லட்சம் ஹெக்டேரிலிருந்து 189.51 லட்சம் ஹெக்டேராக வீழ்ச்சி கண்டுள்ளது.

பருப்பு வகைகள்: இருப்பினும், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு 134.23 லட்சம் ஹெக்டேரிலிருந்து 135.83 லட்சம் ஹெக்டேராக சற்று உயா்ந்துள்ளது.

பணப்பியிராக கருதப்படும் பருத்தி பயிரிடும் பரப்பளவு 128.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 117.42 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது.

அதிக பற்றாக்குறை: மாறாக, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 53.96 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு பயிரிடும் பரப்பு தற்போது 54.70 லட்சம் ஹெக்டேராக சற்று உயா்வடைந்துள்ளது. அதேபோன்று, சணல் பயிரிடும் பரப்பளவும் 7 லட்சம் ஹெக்டேரிலிருந்து 7.03 லட்சம் ஹெக்டேராக சற்று உயா்ந்துள்ளது.

ஒடிஸா, குஜராத், ஜம்மு-காஷ்மீா், மிஸோரம் மாநிலங்களில் பருவமழைக்கு பெருமளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.