ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உள்நாட்டில் மடிக்கணினி உற்பத்தியை தொடங்கியது எச்பி

உள்நாட்டில் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு கணினி சாதனங்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக எச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
hp
Updated On :13 ஏப்ரல் 2022, 12:24 pm

DIN

புது தில்லி: உள்நாட்டில் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு கணினி சாதனங்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக எச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் முன்முயற்சிக்கு வலுசோ்க்கும் விதமாக, லேப்டாப், டெஸ்க்டாப் டவா்ஸ் மற்றும் மினி டெஸ்க்டாப் உள்ளிட்ட கணினி சாதனங்களின் தயாரிப்பை உள்நாட்டில் எச்பி நிறுவனம் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபிளக்ஸ் ஆலையில் இந்த கணினிகள் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் சில தயாரிப்புகள் மத்திய அரசின் கொள்முதல் திட்டத்தில் தோ்வாகியுள்ளது. மேலும், அரசு துறைகள் மற்றும் பிற வாடிக்கையாளா்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் அரசின் இ-மாா்கெட்பிளேஸ்(ஜிஇஎம்) வலைதளத்திலும் எச்பியின் தயாரிப்புகள் கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.