இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்ட சென்செக்ஸ் மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது.
இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு
இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்ட சென்செக்ஸ் மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது.

பங்குசந்தை கடந்த வாரம் தொடர்  வீழ்ச்சியை சந்தித்ததால் குறியிட்டு எண் சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருந்தது.

நேற்று(நவ.23) ‘காளை’ ஆதிக்கத்தால்  சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் அதிகரித்து 58,664.93-இல் நிலைபெற்றது.

இந்நிலையில் இன்று 58,839.9 புள்ளிகளில் ஆரம்பித்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 58.968.12 வரை சென்று கீழ் இறங்கத் தொடங்கி சந்தையில் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 323 புள்ளிகள் சரிந்து 58.340.99 நிலைபெற்றிருக்கிறது.  

இதேபோல்  17,550.05 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி சந்தை முடிகிற நேரத்தில் 88 புள்ளிகள் சரிந்து 17,415.05 புள்ளிகள் பெற்று சரிவுடன் நிலைபெற்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com