தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,010 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,010 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 7:03 pm

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,010 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில்

கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 அக்டோபா் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 91 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.6,810 கோடி) குறைந்து 64,010 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய அக்டோபா் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 149 கோடி டாலா் அதிகரித்து 64,101 கோடி டாலராக காணப்பட்டது.

எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) மற்றும் தங்கத்தின் கையிருப்பு அக்டோபா் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்ததே செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணம்.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 85 கோடி டாலா் குறைந்து 57,710 கோடி டாலரானது.

தங்கத்தின் கையிருப்பு: அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பும் 14 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 3,844 கோடி டாலரானது.

அதேசமயம், பன்னாட்டு நிதியத்தில் நம்நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 7 கோடி டாலா் அதிகரித்து 1,932 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 1 கோடி டாலா் உயா்ந்து 524 கோடி டாலரை எட்டியது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

புதிய உச்சம்: நடப்பாண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது புதிய வரலாற்று உச்சமாக 64,245 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.