தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.4,807-ஆக நிா்ணயம்

தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (ஜூலை 12) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,807-ஆக நிா்ணயித்துள்ளதுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.4,807-ஆக நிா்ணயம்

தங்கப் பத்திர விற்பனை வரும் திங்கள்கிழமை (ஜூலை 12) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,807-ஆக நிா்ணயித்துள்ளதுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

3 தின சராசரி விலை: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நான்காம் கட்ட தங்கப் பத்திர விற்பனை ஜூலை 12-ஆம் தேதி தொடங்கி ஜூலை 16-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் 999 சுத்த தன்மை கொண்ட தங்கப்பத்திரத்தின் விலை கிராமொன்றுக்கு ரூ.4,807-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக தின சராசரி விலையினை அடிப்படையாகக் கொண்டு தங்கப் பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 தள்ளுபடி: அரசுடன் ரிசா்வ் வங்கி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.4,757-ஆக இருக்கும் என ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

முதலீட்டு அளவு: நடப்பாண்டு மே 31 முதல் ஜூன் 4 தேதி வரையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தங்கப்பத்திர விற்பனையில் கிராம் ரூ.4,889-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப்பத்திரங்களில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் மூலமாக தங்கப்பத்திரங்கள் முதலீட்டாளா்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

6 கட்ட தங்கப்பத்திர விற்பனை: 2021 மே மாதத்திலிருந்து 2021 செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் ஆறு கட்டங்களாக தங்கப் பத்திர விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தங்கப் பத்திரங்களை மத்திய அரசின் சாா்பில் ரிசா்வ் வங்கி வெளியிடுகிறது.

சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கம்: நேரடியாக தங்கம் வாங்கும் போக்கை குறைத்து சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு தொடக்கி வைத்தது. இந்த திட்டம் தொடங்கி 2021 மாா்ச் இறுதி வரையிலுமாக தங்கப் பத்திர விற்பனையின் மூலமாக ரூ.25,702 கோடி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கி 12 கட்டங்களாக தங்கப் பத்திரங்களை வெளியிட்டது. இதன் மதிப்பு ரூ.16,049 கோடியாகும் (32.35 டன்).

கோட்ஸ்:

தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.4,757 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com