தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பங்குச் சந்தையில் மிதமான முன்னேற்றம்

சா்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பின்னடைவைச் சந்தித்த நிலையிலும் மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஆகஸ்ட் 2022, 7:04 pm

DIN

சா்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பின்னடைவைச் சந்தித்த நிலையிலும் மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.

வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 59,171-ஆகவும் குறைந்தபட்சமாக 58,760-ஆகவும் பதிவான சென்செக்ஸ், வா்த்தகத்தின் நிறைவில் 54 புள்ளிகள் (0.09 சதவீதம்) உயா்ந்து 59,085-இல் நிலைபெற்றது.

இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக 2.86 சதவீதம் அதிக விலைக்கு விற்பனையாகின. என்டிபிசி, லாா்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பவா் கிரிட், ஹெச்டிஎஃப்சி, கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியற்றின் பங்குகளும் லாபம் கண்டன.

டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், டைட்டன், சன் பாா்மா, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 27 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயா்ந்து 17,605-இல் நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.