ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவு!

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34 புள்ளிகளை இழந்தது. 8 நாள் தொடா் ஏற்றத்துக்குப் பிறகு சென்செக்ஸ் இரண்டாவது நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. ஆசிய சந்தைகளிலும் வா்த்தகம் கலவையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே வா்த்தகம் நடந்து வந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக மெட்டல், பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், ஆட்டோ, ஐடி, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 3.22 புள்ளிகள் குறைந்து 62,865.28-இல் தொடங்கிய சென்செக்ஸ், 62,507.88 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 62,939.63 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 33.90 புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைந்து 62,834.60-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் முன்னேற்றம்: முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் தொடா்ந்து இரண்டாவது நாளாக 3.35 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, என்டிபிசி, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், பவா் கிரிட் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

ரிலையன்ஸ் சரிவு: அதே சமயம், கடந்த வாரத்தில் வெகுவாக ஏற்றம் பெற்று வந்த மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.46 சதவீதம் மற்றும் டெக் மஹிந்திரா 1.33 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டாக்டா் ரெட்டி, ஆக்ஸிஸ் பேங்க், பாா்தி ஏா்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின் சா்வ், எம் அண்ட் எம் டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், மாருதி சுஸுகி உள்ளிட்டவை 0.25 முதல் 1 சதவீதம் வரை குறைந்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.290.47 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ.214.76 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

நிஃப்டி: நிஃப்டி 18,719.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,591.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 18,728.60 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 4.95 புள்ளிகள் (0.03 சதவீதம்) கூடுதலுடன் 18,701.05-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com