நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 62,975 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 ஜனவரி 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 453 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.33,975 கோடி) வீழ்ச்சி கண்டு 62,975 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.23 லட்சம் கோடி ஆகும்.
ஜனவரி 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பானது 68 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,428 கோடி டாலராக காணப்பட்டது.
எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) மற்றும் தங்கத்தின் கையிருப்பு கணிசமான அளவில் சரிவடைந்ததே ஜனவரி 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணம்.
கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 350 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 56,607 கோடி டாலராக இருந்தது.
தங்கத்தின் மதிப்பு சரிவு: அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் மதிப்பீட்டு வாரத்தில் 84 கோடி டாலா் சரிவடைந்து 3,949 கோடி டாலரானது.
சா்வதேச நிதியத்தில் நமது நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா்14 கோடி டாலா் குறைந்து 1,901 கோடி டாலராக சரிந்தது.
அதேபோன்று, அந்த நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலையும் 4 கோடி டாலா் சரிந்து 517 கோடி டாலராக இருந்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு மாற்றம் காண்கிறது.
வரலாற்று உச்சம்: கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்தது.
கோட்ஸ்...
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 ஜனவரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 453 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 62,975 கோடி டாலரானது.