ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சரிவைச் சந்திக்கும் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 104 புள்ளிகள் இழப்பு

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் நாலாவது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் குறைந்ததால் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:21 am

DIN

இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் நாலாவது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் குறைந்ததால் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

நேற்று (பிப்.16)  57,996.68 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,217.69 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  104.67 புள்ளிகளை இழந்து 57,892.01  புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,322.20 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,396.55 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 17.60 புள்ளிகள் இழந்து 17,304.60  புள்ளிகளுடன் நிலைபெற்றது.

சென்செக்ஸில் எச்டிஎஃப்சி,  ரிலையன்ஸ்,  ஏற்றத்தையும் ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட்,  ஆகியவை இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.

நிஃப்டி வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி லைப், ரிலையன்ஸ் டாடா கான்ஸ் ஏற்றத்தையும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி இறக்கத்தையும் அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.