ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரடிப் பிடியில் சிக்கிய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் இழப்பு

இந்த வாரத்தின் முதல் நாளிலிலிருந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வந்த  சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,100 புள்ளிகளை இழந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:36 am

DIN

இந்த வாரத்தின் முதல் நாளிலிலிருந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வந்த  சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,100 புள்ளிகளை இழந்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகிறது. சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் இழந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று (ஜன.26) 57,858.15 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,317.38 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு        எண்ணான சென்செக்ஸ் (11.00 மணி நிலவரப்படி) 1,101 புள்ளிகளை இழந்து 56,756.96 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 17,277.95 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,062.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 333 புள்ளிகள் சரிந்து 16,944.40 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.