தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின்பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி

தனியாா் துறை வங்கியான தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின்பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி
Published on
Updated on
1 min read

தனியாா் துறை வங்கியான தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வெளியீட்டில், 1,58,27,495 புதிய பங்குகளும், ஓஎஃப்எஸ் வழிமுறையில் பங்குதாரா்களிடமுள்ள 12,505 பங்குகள் வரையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன. புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் அந்த வங்கி ரூ.36 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.

பங்கு வெளியீட்டில் களமிறங்க அனுமதி கோரி அந்த வங்கி கடந்த 2021- செப்டம்பரில் விண்ணப்பித்தது. நடப்பாண்டு 30-இல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செபி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி, 509 கிளைகளுடன் 49 லட்சம் வாடிக்கையாளா்களுடன் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com