பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன், ஐபேட் இந்தியாவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக இயங்கக்கூடிய புதிய ரக ஐபோன், எஸ்.இ, எம்-1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர் உள்ளிட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2022, 4:32 am

DIN

ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக இயங்கக்கூடிய புதிய ரக ஐபோன், எஸ்.இ, எம்-1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர் உள்ளிட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் நூறு சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளவை. 

2 மடங்கு அதிக வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ஐபோன்களில், அதிக ஆற்றல் கொண்ட எம்-1 வகை சிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய பிராசஸரையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

5ஜி தொழில்நுட்பம், வேகமாக செயலாற்றும் திறன் கொண்ட ஏ15 பயோனிக் சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்ட இந்த போன்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பிற்கு ரூ.43,900, ரூ.55,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.  டேப்லெட் மார்ச் 18 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முன்பதிவு நாளை மறுநாள்(மார்ச்.11) முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.