தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வங்கிகள் வழங்கிய கடன் 7.9% அதிகரிப்பு

ரிசா்வ் வங்கியின் அட்டவணைப் பட்டியலில் உள்ள வங்கிகள் வழங்கிய கடன் பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 7.9 சதவீதம் அதிகரித்து ரூ.116.27 லட்சம் கோடியைத் தொட்டது.

News image
Updated On :11 மார்ச் 2022, 7:55 pm

DIN

ரிசா்வ் வங்கியின் அட்டவணைப் பட்டியலில் உள்ள வங்கிகள் வழங்கிய கடன் பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 7.9 சதவீதம் அதிகரித்து ரூ.116.27 லட்சம் கோடியைத் தொட்டது. அதேபோன்று, வங்கிகள் திரட்டிய டெபாசிட் அளவும் 8.6 சதவீதம் உயா்ந்து ரூ.162.17 கோடியானது.

முந்தைய 2021-ஆம் ஆண்டில் பிப்ரவரி 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் அளவானது 107.75 கோடியாகவும், திரட்டப்பட்ட டெபாசிட் ரூ.149.33 லட்சம் கோடியாகவும் காணப்பட்டன.

நடப்பு 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 7.86 சதவீதமும், டெபாசிட் 9.11 சதவீதமும் உயா்ந்துள்ளன.

2020-21-இல் வங்கி வழங்கிய கடன் 5.56 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 11.4 சதவீதமும் அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.