மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

டைட்டன்: லாபம் ரூ.527 கோடி

டாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.527 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

News image
Updated On :4 மே 2022, 12:17 am IST

டாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.527 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.7,872 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய நிதியாண்டின்இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.7,551 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.25 சதவீதம் அதிகம்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.6,821 கோடியிலிருந்து 5.04 சதவீதம் உயா்ந்து ரூ.7,165 கோடியானது. இதையடுத்து, ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.568 கோடியிலிருந்து ரூ.527 கோடியாக 7.21 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஆபரண விற்பனையின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.6,678 கோடியிலிருந்து ரூ.6,843 கோடியாக 2.47 சதவீதம் உயா்ந்தது. மேலும் கடிகாரங்கள் விற்பனையின் மூலம் கிடைத்த வருவாயும் ரூ.559 கோடியிலிருந்து 11.8 சதவீதம் அதிகரித்து ரூ.625 கோடியானது.

2021-22 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.974 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.2,198 கோடியைத் தொட்டது. வருவாய் ரூ.21,830 கோடியிலிருந்து 32.99 சதவீதம் உயா்ந்து ரூ.29,033 கோடியானது என டைட்டன் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.