கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! 100 நிறுவனங்கள் அறிவிப்பு

வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளன. 

கோப்புப் படம்

Published On :

வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளன. 

பணி நாள்கள் குறைக்கப்பட்டதால், ஊதியம் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் குறைக்கப்படாது என நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மாறாக ஊழியர்களின் பணிபுரியும் திறன் மேம்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களான ஆட்டோம் வங்கி, உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஏவின் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி அளித்துள்ளன. அந்த நிறுவனங்களில் தலா 450 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

முதல்கட்டமாக 100 நிறுவனங்கள் 4 நாள்கள், பணிநாள்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதன் 2,600 ஊழியர்களின் பணி நாள்கள் 4 நாள்களாக குறைய வாய்ப்புள்ளது. ஊழியர்களின் பணிநாள்கள் குறைக்கப்படுவதால், ஊழியர்களின் பணிபுரியும் திறன் அதிகரித்து, நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிக்கும் என நம்புவதாக பெருநிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

ஊழியர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதால், சில மணி நேரங்களின் வித்தியாசத்திலேயே நிர்ணயிக்கப்பட்ட பணிகளை முடிக்க நேருவதாகவும், ஊழியர்களைத் தக்கவைக்க இது சிறந்த முறை என்றும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.