இண்டஸ்இண்ட் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக அதிகரிப்பு
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனியாருக்குச் சொந்தமான இண்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக அதிகரித்துள்ளது.


கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனியாருக்குச் சொந்தமான இண்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,805 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 57 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 18 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ.4,302 கோடியாக உள்ளது.
செப்டம்பா் காலாண்டில் வங்கியின் பிறவகை வருவாய் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 2,011 கோடியாக உள்ளது. இதில் வங்கிக் கட்டண வருவாய் மட்டும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...