நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

18 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி! ஏறுமுகத்தில் வணிகம்

அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 4.18 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 2.89 சதவிகிதமும், எம்&எம் 2.70 சதவிகிதமும், சன்பார்மா 2.65 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

News image
Updated On :31 அக்டோபர் 2022, 4:33 pm IST

வணிக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தலா 1.3 சதவிகிதம் உயர்ந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 786.74  புள்ளிகள் உயர்ந்து 60,746.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.31 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225.40 புள்ளிகள் உயர்ந்து 18,012.20 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.27 சதவிகிதம் உயர்வாகும். 

முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை வாங்கியதால், பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தலா 1.3 சதவிகிதம் உயர்ந்தன. நிஃப்டி பட்டியலிலுள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின. 

இதேபோன்று சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 4.18 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 2.89 சதவிகிதமும், எம்&எம் 2.70 சதவிகிதமும், சன்பார்மா 2.65 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.