எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இறைச்சிக்கு பதில் பன்னீர் விற்பனை? முதலீட்டாளர்களால் தொழிலதிபருக்கு நேர்ந்த அவலம்

இறைச்சி விற்பனை செய்வதற்கு பதில் பன்னீர் விற்பனை செய்தால் முதலீட்டாளர்கள் பணம் தரத் தயாராக இருப்பதாக பிரபல இறைச்சி விற்பனை செய்யும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 3:56 pm IST

இறைச்சி விற்பனை செய்வதற்கு பதில் பன்னீர் விற்பனை செய்தால் முதலீட்டாளர்கள் பணம் தரத் தயாராக இருப்பதாக பிரபல இறைச்சி விற்பனை செய்யும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். 

இறைச்சி விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கியபோது நிதி ஆதாரத்திற்காக பல முதலீட்டாளர்களிடம் அவமானப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லீஷியஸ் எனும் இறைச்சி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் கட்நத 2015ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் அபய் அஞ்சுரா, விவேக் குப்தா ஆகியோரால் தொடங்கப்பட்டது. 

பண்ணை முதல் தட்டு வரை என்ற முறையில், ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளை வீடுகளுக்கு பயனாளர்களின் ஆர்டரின் பேரில் டெலிவரி செய்து வருகிறது. 

Story image

இந்நிலையில், இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது ஆரம்பகட்டத்தில் நிதி ஆதாரத்திற்காக கடும் சிரமத்திற்குள்ளானதாக இதன் இணை நிறுவனர் அயய் அஞ்சுரா தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, சில முதலீட்டாளர்கள் இறைச்சி விற்பனை செய்யும் தொழிலுக்கு பதில், பன்னீர் விற்பனை செய்தால் முதலீடு செய்வதாகத் தெரிவித்தனர். குஜராத்தை சேர்ந்த பெரும் முதலீட்டாளர் ஒருவர் இறைச்சி விற்பனை துறையில் முதலீடு செய்ய விருப்பமில்லை என நேரடியாக வெளியேற்றியதாகவும் குறிப்பிட்டார். 

இறைச்சி விற்பனை செய்யும் ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நிதி அடிப்படையில் மட்டுமல்லாமல் நிர்வாக அடிப்படையில் கூட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டதாக அபய் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.