தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இறைச்சிக்கு பதில் பன்னீர் விற்பனை? முதலீட்டாளர்களால் தொழிலதிபருக்கு நேர்ந்த அவலம்

இறைச்சி விற்பனை செய்வதற்கு பதில் பன்னீர் விற்பனை செய்தால் முதலீட்டாளர்கள் பணம் தரத் தயாராக இருப்பதாக பிரபல இறைச்சி விற்பனை செய்யும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 10:26 am

DIN

இறைச்சி விற்பனை செய்வதற்கு பதில் பன்னீர் விற்பனை செய்தால் முதலீட்டாளர்கள் பணம் தரத் தயாராக இருப்பதாக பிரபல இறைச்சி விற்பனை செய்யும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். 

இறைச்சி விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கியபோது நிதி ஆதாரத்திற்காக பல முதலீட்டாளர்களிடம் அவமானப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லீஷியஸ் எனும் இறைச்சி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் கட்நத 2015ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் அபய் அஞ்சுரா, விவேக் குப்தா ஆகியோரால் தொடங்கப்பட்டது. 

பண்ணை முதல் தட்டு வரை என்ற முறையில், ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளை வீடுகளுக்கு பயனாளர்களின் ஆர்டரின் பேரில் டெலிவரி செய்து வருகிறது. 

Story image

இந்நிலையில், இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது ஆரம்பகட்டத்தில் நிதி ஆதாரத்திற்காக கடும் சிரமத்திற்குள்ளானதாக இதன் இணை நிறுவனர் அயய் அஞ்சுரா தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, சில முதலீட்டாளர்கள் இறைச்சி விற்பனை செய்யும் தொழிலுக்கு பதில், பன்னீர் விற்பனை செய்தால் முதலீடு செய்வதாகத் தெரிவித்தனர். குஜராத்தை சேர்ந்த பெரும் முதலீட்டாளர் ஒருவர் இறைச்சி விற்பனை துறையில் முதலீடு செய்ய விருப்பமில்லை என நேரடியாக வெளியேற்றியதாகவும் குறிப்பிட்டார். 

இறைச்சி விற்பனை செய்யும் ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நிதி அடிப்படையில் மட்டுமல்லாமல் நிர்வாக அடிப்படையில் கூட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டதாக அபய் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.