மின்னஞ்சலில் அதிக அளவில் விளம்பரங்கள் வருவதாக கூகுள் நிறுவனத்தின் மீது தனியுரிமை எல்லை மீறப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பயனர்களிடம் எந்தவித அனுமதியையோ அல்லது விருப்பத்தையோ பெறாமல், தொடர்ந்து விளம்பரங்கள் வருவதாக கூகுள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவிலான மக்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்துகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் கூகுள் நிறுவனத்தின் (ஜி மெயில்) மின்னஞ்சலையே பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பயனர்களின் விருப்பத்தைப் பெறாமல் அதிக அளவிலான விளம்பரங்கள் நேரடியாக இன்பாக்ஸுக்கே வருவதாக புகார் எழுந்துள்ளது.
பிரெஞ்சு தரவு பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ஆஸ்திரியா நாட்டின் நொய்ப் என்ற நிறுவனம் மின்னஞ்சலில் அதிக அளவு விளம்பரங்கள் வருவதாக கூகுள் மீது புகார் அளித்துள்ளது.
விளம்பரங்களையும், விளம்பரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களையும் அனுப்புவதற்கு கூகுள் நிறுவனம் பயனர்களிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பிறகு பயனர்களுக்கு நேரடியாக வணிக ரீதியிலான விளம்பர மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

